ராவ் துலாராம் யாதவ்
(9 டிசம்பர்1825 – 23 செப்டம்பர் 1863)
ஹரியானா மாநிலத்தில் ராம்புரா சமஸ்தானத்தில் ராஜா ராவ் பூரண்சிங் யாதவ்க்கு மகனாக பிறந்தார் ராவ்துலாராம் யாதவ். துலாசிங் என்ற பெயரோடு வளர்ந்த ராவ்துலாராம்யாதவ் 5வயது முதலே போர்பயிற்சியும், குதிரையேற்றமும் பயில தொடங்கினார்.
தந்தை ராவ்பூரண் சிங் யாதவ் மரணத்திற்கு பிறகு தன்னுடைய 14ம் வயதில் “துலாராம்” என்ற பெயரோடு மன்னராக பட்டம் சூட்டிக் கொண்டார் ராவ்துலாராம் யாதவ். ராவ்துலாராம் யாதவ் தனது உறவினர் ‘ராவ்கோபால் தேவ் யாதவ்’ மற்றும் யாதவ படைகளோடு ஆங்கிலேயர்களை தீரத்துடன் எதிர்த்து வீரப்போர் புரிந்தார்.
1857-ம் ஆண்டு மே மாதம் 17-ம் தேதி 500 பேர் கொண்ட படைக்கு தலைமையேற்று ராவ்கோபால் தேவ் யாதவ் உதவியுடன் வெற்றி பெற்றார் ராவ்துலாராம் யாதவ். ஆங்கிலேயர்களுக்கு நிகரான ஆயுதபலம் பெற 5000 படை வீரர்களோடு துப்பாக்கிகள் ,வெடிமருந்துகள், பீரங்கிகள் போன்ற ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் ஆயு ததொழிற்சாலையை உருவாக்கினார் ராவ்துலாராம் யாதவ்
பாரத நாட்டை கொள்ளையடித்து இந்துக்களை கொடுமைப் படுத்தி ஜிஸியா வரிகளை விதித்து அட்டூழியங்கள் பல செய்திருந்தாலும், மொகலாய வம்சத்தில் வந்த கடைசி மன்னராக இருந்த பகதூர் ஷா ஜாபருக்கு ஆங்கிலேயரை எதிர்த்த காரணத்தினால் பண உதவி, ஆயுதஉதவி, உணவுப் பொருட்கள் போன்றவற்றை தில்லிக்கு அனுப்பி வைத்தார் ராவ்துலாராம் யாதவ்
ஆங்கிலேயருக்கு எதிராக போராடும் போராட்டகாரர்கள் அனைவருக்கும் ஆயுத உதவி, வீரர்களுக்கு தேவையான உணவு, உடை, மருந்துகள் போன்றவற்றை அனுப்பி வைத்தார் ராவ்துலாராம் யாதவ். ஆங்கிலேயர்களை திசை திருப்பிவிட்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஈரான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினார் ராவ்துலாராம் யாதவ். ஆங்கிலேயர்கள் இத்திட்டத்தை ரகசியமாக அறிந்து கொண்டனர்
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை போல மர்மமான முறையில் உடல் முழுதும் விஷம் பரவி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மரணம் அடைந்தார் ராவ்துலாராம் யாதவ். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைபோரில் ராவ்துலாராம் யாதவ், ராவ்கோபால்தேவ் யாதவ் ஆகியோரின் தியாகம் போற்றுதலுக்குரியது!
வடஇந்தியாவில், குறிப்பாக ஹரியானா மாநிலத்தின் யாதவ கிராமங்கள் இந்தியாவின் ராணுவ கிராமங்களாக விளங்குவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ராவ்துலாராம் யாதவ்
- மதுரை கா.ராஜேஷ் கண்ணா