மதுரை மாவட்டம் மாடக்குளம் பொன்மேனி சாலையில் இன்று காலை கணவர் கருப்புசாமி உடன் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார் கோகிலா.
அப்போது, கணவரின் கண் எதிரியே அவரது மனைவியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனராம். அதிர்ச்சி அடைந்த கணவர் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றார் .எனினும் , அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து, கருப்புசாமி மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே ,சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ் எஸ் காலனி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சக்கரவர்த்தி அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்துள்ள செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை