நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சீமானின் உடல் நிலைக் குறித்து அறிக்கை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனிடையே சீமானின் உடல்நலம் பாதித்த தகவல்களால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வழக்கமான உடல்நலப்பரிசோதனைகளுக்காக மருத்துவமனை சென்று,. பரிசோதனை முடிந்து தற்போது வீடு திரும்பினார்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி – என்று வாட்ஸ் அப் வாயிலாக தகவல்கள் பரவின.