Home அடடே... அப்படியா? சத்துணவு திட்ட பணியாளர்… குவிந்த விண்ணப்பங்கள்!

சத்துணவு திட்ட பணியாளர்… குவிந்த விண்ணப்பங்கள்!

noon-meal-job
noon meal job
  • அலங்காநல்லூர் யூனியனில் சத்துணவு திட்ட பணியாளர்களுக்கு குவிந்த மனுக்கள்
  • 65 பதவிகளுக்கு 2 ஆயிரம் பேர் விண்ணப்பம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 34 கிராம ஊராட்சிகளில் சத்துணவுக் கூடங்களில் காலியாகவுள்ள 65 பணி இடங்களுக்கு கடைசி நாளான இன்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.

கொரோனா காலம் என்பதால், மதுரை மாவட்டத்தில் உள்ள சத்துணவு கூடங்களில் காலியிகவுள்ள அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது.

alanganallur union office

அதன்படி, அலங்காநல்லூர் யூனியனில் காலியாகவுள்ள 65 பணியிடங்களுக்கு திங்கள்கிழமை நிலவரப்படி இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளன ராம். இப் பணிக்கு மக்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version