பதினாறுவது முறையாக கொரோனா நிவாரண நிதியாக ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கினார் பூல்பாண்டியன்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 16- வது தடவையாக கொரோனா நிவாரன நிதியாக அளித்தார் முதியவரும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான பூல்பாண்டியன்.
இவர் இதுவரை கொரோனா நிவாரண நிதியாக யாசகம் பெற்ற பணத்தில் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய்யிடம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.