தமிழகத்தில் 5185 பேருக்கு கோவிட் 19 தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தின் புதிதாக 5,185 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது… இதையடுத்து covid-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 6,46,128 ஆக அதிகரித்துள்ளது
இருப்பினும் தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விட, குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்பது ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது
சென்னையில் புதிதாக 1288 பேருக் கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதை அடுத்து. சென்னையில் Covid-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,79,424 ஆக உயர்ந்துள்ளது
கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு, 5,357 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனால் covid-19 தொற்றில் இருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பி அவர்களின் எண்ணிக்கை 5,91,811 ஆக உயர்ந்துள்ளது
சென்னையில் 22 பேர் உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் தலா 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் covid-19 நோய்க்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,120 ஆக அதிகரித்துள்ளது
தமிழகத்தில் தனிமைப் படுத்தப் பட்டவர்கள் உள்பட 44,197 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக covid 19 பாதிப்பு விவரம்