Home கல்வி அண்ணா பல்கலை., செமஸ்டர் கட்டணம் … அக்.29 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

அண்ணா பல்கலை., செமஸ்டர் கட்டணம் … அக்.29 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

anna university

மாணவர்கள் செமஸ்டர் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 29-ம் தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்படும் அனைத்துப் படிப்புகளுக்கும், நடப்பாண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான செமஸ்டருக்கான கட்டணத்தை ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் செலுத்தவேண்டும் என்றும், தவறினால் அபராதத்துடன் செப்டம்பர் 5-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, செமஸ்டர் கட்டணம் செலுத்த கால அவகாசம் செப்டம்பர் 19-ம் தேதி வரை விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதனால் அண்ணா பல்கலைக்கழகம், கட்டணம் செலுத்த மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை அவகாசம் அளித்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் அக்டோபர் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version