தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 879 பேருக்கு covid-19 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் தமிழகத்தில் கோவிட் 19 நோய்த் தொற்றால், 62 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று 4879 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,61,264 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,187 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,80,751 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,165 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு, டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,07,,033 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்: