இராமகோபாலனுக்கு மதுரை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த செப். 30 ஆம் தேதி சென்னையில் முக்தி அடைந்தார் இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளரான ராம.கோபாலன். அவருடைய மறைவை அடுத்து பல்வேறு இடங்களிலும் அவருடைய நினைவாக சிரத்தாஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
மதுரை பாண்டி கோவில் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மதுரை கிழக்கு ஒன்றிய
விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் , இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன் உருவ படத்திற்கு சிரத்தாஞ்சலி செய்யப்பட்டது.
- ரவிச்சந்திரன், மதுரை