காங்கிரஸ் மூளை வளர்ச்சி இல்லாத கட்சி அதில் 6 வருடத்தை வீணாக்கிவிட்டேனே என்று கூறியுள்ளார், நேற்று பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பூ.
காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்ட நடிகை குஷ்பூ பின்னர் பாஜகவில் நேற்று இணைந்தால் இதற்காக சென்னையிலிருந்து டெல்லிக்கு சென்று இருந்தார் குஷ்பூ
இந்நிலையில் இன்று தில்லியிலிருந்து சென்னை திரும்பிய குஷ்பூவுக்கு தமிழக பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு பாஜக., தொண்டர்கள் ஆளுயர மாலை அணிவித்து, மலர் தூவி வரவேற்பு தெரிவித்தனர்.
பின்னர் விமான நிலையத்தில் வைத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்த பிறகே தான் நடிகை என காங்கிரஸ் கட்சியினருக்கு தெரிந்ததா என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சியில் மரியாதை இல்லை; 6 ஆண்டுகளை அக்கட்சியில் வீணாக்கிவிட்டேன் என்று குஷ்பூ வருத்தப்பட்டார்.
பாஜக.,வில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பா.ஜ., தமிழக தலைவர் எல் முருகன் முயற்சியால் நான் பாஜக.,வில் இணைந்தேன். கட்சியை நடத்துவதற்காக, அனைவரிடமும் பேசி, தனது கட்சி தான் நாட்டிற்கு நல்லது செய்யும் என அனைவரிடமும் பேசுகிறார்.
ஆனால், காங்கிரஸ் கட்சி தலைவர், 6 வருடம் கழித்து நான் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு நடிகையாகவே என்னைப் பார்ப்பதாகக் கூறுகிறார். கொஞ்சமும் சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சி இல்லாத ஒரு கட்சி காங்கிரஸ். அங்கே இருக்கும் போதும் மரியாதை இல்லை. வெளியேறும் போதும் மரியாதை இல்லை. அவர்களின் குற்றச்சாட்டிற்கு கமலாலயம் சென்ற பிறகு தான் பதிலளிக்க முடியும்.
6 ஆண்டுகளாகக் கட்சியில் இருந்தும் என்னுடைய உழைப்பிற்கு மரியாதை கிடைக்கவில்லை. திமுக.,வில் இருந்து வெளியே வரும் போது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. காங்கிரசில் இருந்து வெளியேறிய போதும் எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. ஆனால், அங்கிருந்து என்னை பற்றி தவறான குற்றச்சாட்டு வரும் போது, அதற்கு பதிலடி கொடுப்பேன் என்றார் குஷ்பு.