வீரபாண்டியன் கட்டபொம்மன் 221 நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள சிலைக்கு அதிமுக மற்றும் பல்வேறு கட்சியினர் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221 – வது நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே அவர் சிலைக்கு அதிமுக சார்பில் மதுரை மாநகர் மாவட்டப் பொருளாளர் ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
அதேபோல், நாயுடு பல்வேறு சமூக அமைப்பினர் திமுக காங்கிரஸ் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை