பலரின் பாக்கெட்டுகள் காலி. பிக்பாக்கெட் திருடன் ஒரு கட்சி தலைவரின் பையிலிருந்து பர்சை திருடும்போது பிடிபட்டான். உடனே கட்சித் தலைவர் திருடனை பிடித்தார். அனைவரும் சேர்ந்து அடித்து நொறுக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
முன்னாள் உள்துறை அமைச்சர் நரசிம்மா ரெட்டியின் அந்திமகிரியைகளின் போது பிக்பாக்கெட் திருடர்கள் புகுந்து விளையாடினார்கள். அபிமான தலைவர் மரணத்திற்கு தொண்டர்களும் டிஆர்எஸ் கட்சி ஆதரவாளர்களும் வருத்தத்தில் இருந்தபோது… இப்படிப்பட்ட துயரமான சம்பவத்தின் போது கூட பிக்பாக்கெட் திருடர்கள் தம் கைவரிசையைக் காட்டினார்கள்.
பல கட்சித் தலைவர்களின் பாக்கெட்டுகளில் உள்ள பணத்தை கொள்ளையடித்து தம் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டார்கள். அந்த வரிசையில் ஒரு கட்சித் தலைவரின் பாக்கெட்டில் இருந்து பர்சை திருடும்போது கட்சி தலைவர் திருடனைப் பிடித்து விட்டார். அனைவரும் சேர்ந்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவனிடமிருந்து மூன்று ஆயிரத்துக்கு மேலாக பணம் கைப்பற்றினர். இந்த கூட்டத்தை சேர்ந்த மேலும் இருவருக்காக போலீசார் தேடி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் நரசிம்மா ரெட்டியின் இழப்பால் டிஆர்எஸ் கட்சி சோகக் கடலில் மூழ்கியுள்ளது. தம் பிரியமான தலைவரை இழந்தது குறித்து தொண்டர்களும் ஊழியர்களும் கண்ணீர் விட்டு கதறினர். நாயினிக்கு இறுதி முறையாக விடை கொடுப்பதற்காக நூற்றுக்கணக்கில் டிஆர்எஸ் தலைவர்கள் அங்கு வந்தார்கள்.
நகரத்தில் உள்ள மகா பிரஸ்தானம் மயானத்தில் அந்திமக் கிரியைகள் நடந்து முடிந்தன. நரசிம்மா ரெட்டியை நினைவு கூர்ந்து தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள. அதேசமயம் பிக்பாக்கெட் சம்பவம் சற்று நேரம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.