நவம்பர் 4 இன்று கர்வா சௌத் பண்டிகை வட இந்தியாவில் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப் படுகிறது.
மணமான பெண்கள் கணவன் ஆரோக்கியத்தோடும் ஆனந்தத்தோடும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இன்றைய தினம் முழு உபவாசம் இருந்து மாலை நிலவுக்கு பூஜை செய்வது வழக்கம். சந்திரன் வந்த பின்பு ஒரு சல்லடையின் மறைவிலிருந்து கணவரை பார்ப்பது வழக்கம். இந்த கர்வா சௌத் சந்தர்ப்பமாக பெண்கள் கைகளில் மருதாணி இட்டுக் கொள்வார்கள்.
தம் வாழ்க்கை கூட கணவரோடு சேர்ந்து வண்ணமயமாக இருக்க வேண்டும் என்று கோருவார்கள். இந்த பண்டிகையை வட இந்தியாவில் மிகவும் ஆனந்தமாக இன்று கொண்டாடி வருகின்றனர்.
மணமான ஹிந்து பெண்களுக்கு இன்று மிகவும் விசேஷமான நாள். உபவாசமிருந்து பூஜைகள் செய்து சௌபாக்கியமும் கணவரின் ஆயுள் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.
கைநிறைய வண்ண வண்ண வளையல்களும் மருதாணியும் அணிந்து கொள்வார்கள். மங்களகரமான தினமாக பெண்கள் நினைப்பார்கள். இன்று மணப்பெண்ணை போல் அலங்கரித்து கொள்வார்கள்.