Home சற்றுமுன் செல்போன் டவர் மீது ஏறி… ‘குடிமகன்’ தற்கொலை மிரட்டல் ரகளை!

செல்போன் டவர் மீது ஏறி… ‘குடிமகன்’ தற்கொலை மிரட்டல் ரகளை!

rajapalayam-cell-phone-tower1
rajapalayam-cell-phone-tower1

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அரசரடி பகுதியில் குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி நின்று ரகளை:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அரசரடி பகுதியில் செல்போன் டவர் மீது ஏறி நின்று வாலிபர் ஒருவர் கீழே விழுந்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

rajapalayam-cell-phone-tower

இது சம்பந்தமாக தளவாய்புரம் போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர் மாங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜதுரை ( வயது 40) என்பதும் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவரை பத்திரமாக போலீசார் கீழே இறக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version