டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் அதிகம் வறுபடுகிறார் திமுக., எம்பி., டாக்டர் செந்தில்குமார். இவர், பாஜக., துணைத்தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஒரு கருத்துக்கு பதில் போட… அதற்கு வந்துள்ள எதிர்வினைகளில் இவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக., நேரடியாக போட்டியிடும் என்று அண்ணாமலை கருத்து தெரிவிக்க, அப்படியானால், திமுக.,வுக்கு வாழ்த்துகள். தமிழக சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியின்றி திமுக., வென்றதற்காக என்று குறிப்பிட்டு டிவிட்டரில் பதிலளித்தார் டாக்டர் செந்தில்குமார்.
அவருக்கு பதிலளித்த ஒருவர், ‘அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா’ என்று கமெண்ட் போட்டவரால் பரபரப்பு! என்று குறிப்பிட்டு சுவாரஸ்யத்தை ஏற்றியிருக்கிறார்.
அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா என்று கமெண்ட் போட்டவரால் பரபரப்பு! #மனிதாபிமானமற்ற_ஸ்டாலின் #திமுக_படுதோல்வி_அடையும்
இதனிடையே இன்றும், #அரைவேக்காடு_முட்டைபோண்டா என்ற ஹேஷ்டேக் மூலம் டாக்டர் செந்தில்குமாரை கலாய்த்து வருகின்றனர்.