நாளை மறுதினம் மதுரைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் நிகழ்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரைக்கு நீண்டநாள் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கின்ற என்ற வகையில் தமிழக முதல்வர் மதுரை வருகிறார்.
மதுரை மாவட்டம் போல் எந்த ஊர் மாவட்டமும் வரலாற்றில் இல்லை. 1804ல்ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைகை குடிநீர் திட்டம் கொண்டு வந்தது. 1904 ல் ஆரப்பாளையம் பகுதியில் நீரேற்று அமைக்கப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது
1295 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியார் அணையில் இருந்து குழாய் மூலமாக மதுரைக்கு குடிநீர் வினியோகமநிரந்தரமாக கிடைக்கும் வகையில் பணிகள் நடைபெற இருக்கிறது. அதற்காக அடிக்கல் நாட்டுவதற்காக தமிழக முதல்வர் மதுரை வருகிறார். மேலும் 60 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார்
30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆட்சியர் வளாகம் கட்டிடத்தையும் திறந்துவைக்க உள்ளார். இதற்காக வீட்டுக்கு வீடு அழைப்பிதழ் கொடுத்து பொதுமக்களை அழைக்க உள்ளோம். இந்நிகழ்ச்சி அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் நடைபெறுகிறது
152 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. 30 மாதத்தில் இந்த திட்டம் முடிக்கப்பட உள்ளது .. இந்த திட்டம் முடிவடைந்த பிறகு மக்கள் இனிமேல் பானை பெரிய பெரிய பாத்திரங்களில் தண்ணீர் பிடிக்க அவசியமில்லை… என்றார்.