உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டியில், தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. 38 ஆவது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. மழை நின்ற பின் ஆட்டம் தொடர்ந்தது. 43 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்க அணி, 5 விக்கெட் இழந்து, 281 ரன் குவித்திருந்தது. இதை அடுத்து 43 ஓவரில் 298 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் செல்லும்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari