மதுரை சோழவந்தானில் விவசாயிகளின் நணபன் மோடி இயக்கத்தின் துவக்க விழாவில், புதிய வேளாண்சட்டம் குறித்த விளக்கமளிக்கும் கருத்தரங்கம் மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் விவசாய மாநில பொதுச் செயலாளர் மணி முத்தையா அவர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மதுரை மாவட்டத்தை ஏராளமான விவசாய பெருமக்கள் பாரதிய ஜனதா கட்சி அனைத்து கட்சி உறுப்பினர் பலர் இதில் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் L.முருகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மற்றும் விவசாய அணி மாநில தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் உடன் இருந்தனர்
பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் L. முருகன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார் எல்.முருகன்
ரஜினி அரசியல் பிரவேசம் பாஜக வின் பி டீம் என சொல்லப் படுகிறதே ? என்று கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
தமிழகத்தில் தாமரை மலருமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஏற்கெனவே உள்ளாட்சி தேர்தலில் தாமரை பல இடங்களில் மலர்ந்து விட்டது. அதே போல் சட்ட மன்றத்திலும் பாஜக உறுப்பினர்கள் அதிகளவில் அமர்வார்கள்.
மதுரை பாலமேடு சாத்தியார் அணைக்கு முல்லை வைகை பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை கொண்டுவர மத்திய அரசின் மூலம் விரைவில் நடவடிக்கை எடுப்போம்… என்றார் எல்.முருகன்.
தொடர்ந்து மதுரை சோழவந்தானில் புதிய வேளாண்சட்டம் குறித்த விளக்கமளிக்கும் கருத்தரங்கில் பாஜக மாநில பொதுசெயலாளர் ஸ்ரீனிவாசன் பேசினார். அப்போது திமுகவில் படிக்காதவர்கள் அதிகம் இருப்பதால் துண்டு சீட்டை கூட தவறாக படிக்கும் தலைவர்கள் உள்ளனர்… என்றார்.