spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்அறநிலையத் துறையைக் கண்டித்து திருவல்லிக்கேணியில் இந்து முன்னணி கூட்டுப் பிரார்த்தனை!

அறநிலையத் துறையைக் கண்டித்து திருவல்லிக்கேணியில் இந்து முன்னணி கூட்டுப் பிரார்த்தனை!

- Advertisement -
hindu-munnani
hindu munnani

இந்துக்களின் கோரிக்கையை வலியுறுத்தி இறைவன் முன் வேண்டுதல் நிகழ்ச்சியை நடத்துகிறது இந்து முன்னணி அமைப்பு.

சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் முன், இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து இன்று (26 ஆம் தேதி) சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கூட்டுப்பிரார்த்தனை நடைபெற இருக்கிறது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கோரிக்கை 1: ஒவ்வொரு ஆண்டும் சுவாமி வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். இந்தாண்டு கொரானாவை காரணம் காட்டி, இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இதுவரையில் எந்த ஏற்பாடும் செய்யாமல் உள்ளது கவலை அளிக்கிறது.

தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை ஏற்படுத்தி உள்ளது என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். மற்ற மதங்களின் வழிபாட்டிற்கு எந்த தடையும் இல்லை, அரசியல் கட்சிகளின் பொதுகூட்ட நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அரசு தளர்வுகள் ஏற்படுத்தி உள்ளது.

ஆகவே, இந்த ஆண்டு வழக்கம் போல சுவாமி புறப்பாடு நடத்தி பக்தர்களுக்கு காட்சி அளிக்க இந்து சமய அறநிலையத்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோரிக்கை 2 : பெருமாள் கோவில்களில் தரும் துளசி தீர்த்தம் என்பது நோய் தீர்க்கும் மருந்து. இது சமய நம்பிக்கையும் ஆகும். ஆனால், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படாமல் உள்ளது. உடனே பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கோரிக்கை 3: மார்கழி மாதம் எனும் தனுர் மாதம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வது விசேஷம்.  ஆனால், இந்து சமய அறநிலைத்துறை கோவிலின் உள்ளே கம்பிகளை அமைத்து, சுவாமி தரிசனம் செய்ய விடாமல், கோவிலை சுற்றி வர விடாமல் தடுக்கின்றனர்.

கோவிலின் உள்ளே போடப்பட்டுள்ள தடுப்புக் கம்பிகளை அகற்றி பக்தர்களுக்கு போதிய பாதுகாப்புடன் சுவாமியை சுற்றி வர அனுமதி அளிக்க வேண்டும்.

கோரிக்கை 4: வைணவத்தின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில். இங்கு பாராயணம் செய்யப்பட்டு வந்த நிலையில் தவறான அணுகுமுறையால், பூட்டிய கதவின் முன் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றது. இது போன்ற கொடும் செயல்கள் நிறுத்தப்பட்டு பாராயணம் சிறப்பாக நடைபெற இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத்துறைக்கு நல்ல புத்தியை வழங்க பார்த்தசாரதி பெருமாளிடம் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற இருக்கிறது.

மத்திய சென்னை மாவட்டம் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதிகளின் சார்பில் 26.12.2020 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்  வேண்டுதல் பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி சென்னை மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன் தலைமை தாங்குகிறார். மாநகர, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள், பக்தர்கள் குடும்பத்துடன் இந்தப் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் என்று இந்து முன்னணி அமைப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe