― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகிரைம் நியூஸ்பத்து வயது சிறுமி.. 72 வயது சொந்த தாத்தாவால் பாலியல் தொந்தரவு!

பத்து வயது சிறுமி.. 72 வயது சொந்த தாத்தாவால் பாலியல் தொந்தரவு!

- Advertisement -
vankodumai

சொந்த தாத்தாவே தனது பேத்திக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தைச் சேர்ந்த 36 வயதுப் பெண்ணுக்கு, கோவையை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இதனால் அந்த பெண் தனது மாமனார் மாமியார் பராமரிப்பில் தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் சொந்த தாத்தாவான சுப்ரமணியன்(72) தனது 10 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.

இதை கேட்டு அதிர்ந்து போன அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அடைக்கலமாக வாழ்ந்து வந்த வீட்டில் சொந்த தாத்தாவே தனது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version