மத்திய பிரதேசத்தின் சதர்பூரில் ஒரு இளைஞன் குழந்தை பருவத்திலிருந்தே உலோகப் பொருட்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் சாப்பிடுவதற்கு இரும்புப் பொருட்கள் கிடைக்காததால் சமையலறையில் இருந்த கத்தியை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25-ம் தேதி சமையலறையில் 5 அங்குல நீளமுள்ள கூர்மையான விழுங்கியுள்ளார்.
அந்த கத்தி சுவாசக் குழாயில் சிக்கியது. இதன் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தது. அவர் ரகசியமாக எதையாவது சாப்பிட்ட்டிருக்கக் கூடும் என்று அவரது குடும்பத்தினர் உணர்ந்தனர். அத்தகைய சூழ்நிலையில், அவர் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவர் ஸ்கேன் செய்து பார்த்த போது, அதிர்ச்சியூட்டும் விஷயம் வெளியே வந்தது. இதயத்திலிருந்து வெளியேறும் இரத்த நாளத்தின் இதயத்திற்கு அருகில் அந்த கத்தி இருந்தது, கூர்மையான பகுதி கீழே இருந்தது. மேலும் கத்தி எந்த நேரத்திலும் நகர்ந்து, இதயத்தின் இரத்த நாளத்தை வெட்டும் அபாயமும் இருந்தது..
மருத்துவர் மிகவும் கவனமாக அறுவை சிகிச்சை மூலம் கத்தியை வெளியே எடுத்தார். இதே போல் அவரது உடலில் இருந்த கரண்டி உள்ளிட்ட பிற பொருட்களும் அகற்றப்பட்டன. இப்போது அந்த நபரின் உடல்நிலை சீராக உள்ளது.
இதற்கு முன்பும் கூட இந்த இளைஞன் கரண்டி உள்ளிட்ட பொருட்களை விழுங்கியுள்ளார். இதனால் வயிறு வலிக்க ஆரம்பித்தபோது, குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது தான், அந்த இளைஞன் இதுபோன்ற விஷயங்களை சாப்பிடுவதற்கு அடிமையாக இருப்பது தெரியவந்தது.
அத்தகைய சூழ்நிலையில், கரண்டி, ஊசிகளையும் சிறிய அளவிலான உலோக பொருட்களையும் அந்த இளைஞருக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தனர். தற்போது உலொகப் பொருட்கள் கிடைக்காத நிலையில், அவர் கத்தியை விழுங்கியுள்ளார்.