spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்நீச்சல் பழக கிணற்றில் குதித்த சிறுமி! ஆடை இறுக்கியதால் மரணம்!

நீச்சல் பழக கிணற்றில் குதித்த சிறுமி! ஆடை இறுக்கியதால் மரணம்!

- Advertisement -
well 1

வந்தவாசி அருகே கிணற்றில் நீச்சல் பழகிய 5 ஆம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் தமிழேந்தி. இவர் வல்லம் அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று தமிழேந்தி, தனது தோழிகளுடன் வீட்டின் அருகேயுள்ள விவசாய கிணற்றுக்கு நீச்சல் பழகுவதற்காக சென்றுள்ளார்.

உடலில் சேலையை கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்கி நீச்சல் பழகியபோது, திடீரென தமிழேந்தியின் கை மற்றும் கால்களை சேலை இறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கை, காலைகளை அசைக்க முடியாமல் அவர் நீரில் மூழ்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தோழிகள் கூச்சலிட்டதால், அருகில் இருந்த தொழிலாளர்கள் கிணற்றில் குதித்து சிறுமியை தேடினர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவரை மீட்க முடியவில்லை.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்தவாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி சிறுமியின் சடலத்தை மீட்டனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய வடவணக்கப்பட்டி போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe