மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசித் தகர்க்க போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்து மிரட்டல் விடுத்த கொருக்குப்பேட்டை இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
தமிழக அரசு வேலை வழங்காவிட்டால் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை தகர்க்கப் போவதாக இளைஞர் நேரில் மிரட்டியுள்ளார்.
இளைஞர் மணிகண்டன் பிரசாத் மனநலம் பாதிக்கப்பட்டவரா ? என்ற சந்தேகத்தில் மெரினா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.