6,7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போதை சூழலால் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
6,7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதைய சூழலில் அவர்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும், அவர்களுக்கு “டேப்” வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் தற்போது 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருப்பதாக கூறினார்.