உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள பார்த்தாபூர் பகுதியில் வசிக்கும் ஒருவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் பல கிரிமினல் வழக்குகளில் சிக்கி திகார் மற்றும் தஸ்னா சிறையில் பல ஆண்டுகள் இருந்தார். சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த அவர் பராத் மாவட்டத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து ரூ .2 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
ஆனால் அவர் வாங்கிய கடனை சொன்ன நேரத்தில் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அவருக்கு கடனை கொடுத்தவர் அடிக்கடி கடனை கேட்டு தொல்லை படுத்தியுள்ளார்.
மேலும் அவரின் வீட்டிற்கே வந்து தகராறு செய்துள்ளார். இதனால் கடன் வாங்கிய லாரி ஓட்டுநர் தான் வாங்கிய ரெண்டு லட்ச ரூபாய் கடனுக்கு தன்னுடைய மகளை கூட்டி போகுமாறு கூறியுள்ளார். அதனால் கடன் கொடுத்தவர், கடனுக்காக அவரின் மகளை கூட்டி சென்றார்.