சின்னத்துறை கடற்கரையில் 200 கிலோ எடை கொண்ட ராட்சத ஆமை ஒன்று கரை ஒதுங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சின்னத்துறை மீனவ கிராமத்தில் இன்று காலை சுமார் 200 கிலோ மதிக்கதக்க ராட்சத ஆமை ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. இந்த ஆமை கடல் பரப்பில் இருந்து அதிக தூரம் கரை பகுதியில் வந்ததால் திரும்ப கடலுக்குள் செல்ல முடியாமல் மணலில் புதைந்த நிலையில் தத்தளித்து.
இதனையடுத்து ராட்சத ஆமை கரை ஒதுங்கிய தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஆமையை பார்க்க அங்கு திரண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த நித்திரவிளை காவல்நிலைய தனிப்படை ஏட்டு ஜோஸ் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உதவியுடன் ஆமையை கடலுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து பலமணி நேர போராட்டத்திற்கு பின் ஆமை பாதுகாப்பாக கடலுக்குள் விடபட்டது