Home இந்தியா பொது இடத்தில் மனைவியை கொல்ல முயன்ற கணவன்! காப்பாற்றிய பொதுமக்கள்!

பொது இடத்தில் மனைவியை கொல்ல முயன்ற கணவன்! காப்பாற்றிய பொதுமக்கள்!

பொது இடத்தில் மனைவியை கொல்ல முயன்ற கணவன். காப்பாற்றிய பொதுமக்கள்.

கம்மம் மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்தது. பொது இடத்தில் மனைவியை கொல்லப் பார்த்த ஒரு நபரை பிடித்து உள்ளூர் மக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

சிலக கோயலபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த நவ்யாவும் நாகேஸ்வரராவும் தம்பதிகள். இவர்கள் இருவரின் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு சில நாட்களாக தகராறு நடந்து வருகிறது. அதனால் நவ்யா குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மனைவி மீது கோபம் வளர்த்துக்கொண்ட நாகேஸ்வரராவ் உள்ளூர் டிஎன்ஜிஓ காலனி அருகில் நவ்யாவை கொல்வதற்கு முயற்சித்தான். புதர்களுக்கு இடையே இழுத்துச் சென்று கழுத்தை முறித்துக் கொல்வதற்கு முயற்சித்தான். ஆனால் நவ்யா கூச்சலிட்டதால் உள்ளூர் மக்கள் எச்சரிக்கை அடைந்து நாகேஸ்வரராவு மீது கற்களை எறிந்து நவ்யாவை காப்பாற்றினார்கள்.

நாகேஸ்வரராவைப் பிடித்து போலீசாருக்கு செய்தி தெரிவித்தார்கள். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாகேஸ்வர ராவை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தார்கள்.

சிகிச்சைக்காக நவ்யாவை உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version