Home அடடே... அப்படியா? தமிழகத்தில் இடஒதுக்கீடு செய்வதில் முரண்பாடு: தேவரின கூட்டமைப்பு அறிக்கை!

தமிழகத்தில் இடஒதுக்கீடு செய்வதில் முரண்பாடு: தேவரின கூட்டமைப்பு அறிக்கை!

தமிழகத்தில் இட ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட. முரண்பாடு குறித்து தேவரின கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் மொத்தம் 69 சதவீத இட ஒதுக்கீடு கடைபிடிக்கப் படுகிறது பிற்படுத்தப்பட்டோர் 30 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 சதவிகிதம் பட்டியல் இனத்தவர்கள் எஸ்.சி எஸ்.டி-18 சதவிகிதம் பழங்குடியினர் 1 சதவிகிதம் என்று ஒதுக்கீடு செய்ய வேண்டும் .

இதில் முக்குலத்தோர் பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) பிரிவில் வருகிறது.

பா.ம.கவினரின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கிடு வழங்கி அதற்கான மசோதாவையும் அவர் தாக்கல் செய்தார் .

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலில் 122. ஜாதிகள் உள்ளன இதில், வன்னியர் சமூகத்தினர் கீழ் 7 ஜாதிபிரிவுகள் உள்ளது 7 ஜாதி பிரிவுகளக்கு மட்டும் 10.5 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்பதாக இருந்தால் பொதுப் பட்டியலில் உள் ஒதுக்கீடு செய்திருக்கலாம்

தமிழகத்தில் நீண்ட காலமாக பல ஜாதிகள்போராடிக் கேட்ட உரிமைகளை மறுத்து ஒரு ஜாதியினர் மட்டும் பலன் பெறும் வகையில் முதல்வர் எடப்பாடி தவறு செய்து விட்டார்.

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடியின் தவறை கண்டித்து முக்குலத்தோர் மற்றும் இதர சமூகத்தினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்று தேவரின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version