தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக சிங்கம்புணரி, கண்ணமங்களம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 8-ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை அந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அதேபோல, காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோதமகங்கலம் உள்ளிட்ட 8-ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை அந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
விருதுநகர் மாவட்டம் ஆவியூர், புல்வைகறை, காரியாபட்டி ஆகிய துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக 8-ம் தேதி அந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
சென்னை மாவட்டம் கீழ்ப்பாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக 9-ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை அந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
சென்னை மாவட்டம் பெரியார் நகர் (Agaram – PERIYAR NAGAR 33 KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக எஸ்.ஆர்.பி கோயில், தாந்தோனி அம்மன் கோயில் தெரு, சோமையா ராஜா தெரு, பாபு ராஜா தெரு, சாம்பவசிவம் தெரு, லோகோ வொர்க்ஸ் மெயின் ரோடு, ஜிகேஎம் காலணி முதல் தெரு முதல் 8 வது தெருவரை, சர்க்கிள் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 9-ம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை அந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
கோவை மாவட்டம் தேக்கம்பட்டி (BHAVANI BARRAGE), தேவராயாபுரம், மருதூர், பெரியநாயக்கன்பாளையம், சீரன்நாயக்கன் பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக 9-ம் தேதி மேற்கண்ட துணை மின்நிலைய பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அம்மச்சன்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக அம்மையாநாயக்கன்பாளையம், கோடைரோடு, ராஜாதானிகோட்டை ஒரு பகுதி, பள்ளப்பட்டி, ஆர்.பி.புதூர், சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 9-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அதேபோல தாடிக்கொம்பு லக்ஷமணம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக 9-ம் தேதி மின் விநியோகம் இருக்காது.
கரூர் மாவட்டம் கரூர் எல்.ஜி.பி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக 9-ம் தேதி மின் விநியோகம் இருக்காது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு முசிறி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக முசிறி, இன்டஸ்டீரியல் 1 மற்றும் 2ம் பகுதிகளில் 9-ம் தேதி மின் விநியோகம் இருக்காது.
சிவகங்கை மாவட்டம் பெரியாண்டிப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பி.கே.புதூர், தோட்டம்பட்டி, கவுண்டம்பாளையம், ஆண்டவர் ஸ்டீல்ஸ், எலையம்பாளையம், துலுக்கம்பாளையம், மேலப்பாளையம் பகுதிகளில் 9-ம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அதேபோல மடகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக மடகுபட்டி, எரியூர், அழகமநேரி, பாட்டாமங்களம் உள்ளிட்ட 9-ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை அந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.