ஸ்பெயின் நீதிமன்றம் மல்லோர்கா தீவிற்கு ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணி வர பத்து வருடம் தடை விதித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா தீவிற்கு சுற்றுலாவிற்கு வந்த நபர் ஒரு சிறுமியை ஆபாசமாக படம் பிடித்ததால் இவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. இதனால் 52 வயதுடைய அந்த நபர் 10 ஆண்டுகளுக்கு ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல முடியாது. இந்த வழக்கு ஜெர்மனி நாட்டிலிருந்து காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டது. முதலில் அந்த நபருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கியது. இதன்பின் 10 வருடத்திற்கு அந்நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.
இந்த சம்பவமானது கடந்த 2019 ஆம் ஆண்டில் மல்லோர்கா தலைநகரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்தது.
இந்த இடத்தில் அந்த நபர் 14 வயது சிறுமியை ஆபாசமாகப் படம் பிடித்துள்ளதை ,பாதுகாப்பு ஊழியர்கள் கண்டறிந்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து இருந்தனர்.
அதன்பின் இவர் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக தற்போது இவருக்கு 10 ஆண்டுகள் நுழைய தடை விதிக்கப்படும் 4806 100 யூரோ அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1000 யூரோ வழங்குமாறு உத்தரவிட்டது .