― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மதுரையில் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.2,80,000 பறிமுதல்!

மதுரையில் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.2,80,000 பறிமுதல்!

- Advertisement -

மதுரையில் சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.2,80,000 பறிமுதல் செய்யப் பட்டது.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகபூப்பாளையம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி ராஜா தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டமர்!

அப்போது, மதுரை எஸ்எஸ் காலனி பகுதியை சேர்ந்த உணவு பொருட்கள் மொத்த விற்பனை வியாபாரி செல்வகுமார் என்பவர் இன்று பொருள்களை கடைகளுக்கு விநியோகம் செய்து விட்டு திரும்பினார்.

சரக்கு வாகனத்தில் வந்தவர்களை கண்காணிப்பு அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்ததில், அவரிடம் கணக்கில் வராத ரூ.2,80,000 ரொக்க பணம் இருந்தது. அதை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டூர்சாமி முன்னிலையில் சீலிட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட நபர் தரும் பட்சத்தில் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டூர்சாமி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version