மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்ற பெண்ணின் உடலில் ஆணுறை இருப்பதை கண்டறிந்தனர்.
பெண் ஒருவர் தனக்கு தொடர்ந்து ஆறு மாதங்களாக வரும் இருமல்,காய்ச்சல் போன்ற பல அறிகுறிகளை அனுபவித்த பின் தனக்கு காச நோய் இருப்பதாக அஞ்சினார். ஆனால் அது காசநோய் இல்லை என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
பின்னர் சோதனை செய்ததில் ஆணுறை பெண்ணினுடைய நுரையீரலைச் சிக்கி கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
27 வயது உடைய அவருடைய பள்ளி ஆசிரியர் பரிந்துரையின் பேரில் அந்தப் பெண் மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்க மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அங்கு அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் காசநோய்க்கான எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதிபட தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை முதலில் காசநோய்க்கான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பின்னர் மார்புப்பகுதியில் எக்ஸ்ரே எடுத்த பிறகு அதில் அனைத்தும் எதிர்மறையாக இருந்தது நுரையீரலின் மேல் வலது பக்கத்தில் வீக்கத்தை கண்டறிந்தார் மருத்துவர்.
பிறகு அது ஆணுறை என அடையாளம் கண்டனர் மருத்துவர்கள். நோயாளியுடன் அச்சம்பவத்தை கேட்டு எதிர்கொண்ட பிறகு பெண் மற்றும் அவரது கணவர் இருவரும் பொய் கூறியது ஒப்புக் கொண்டனர்.
ஆரம்பத்தில் அந்த பெண் மருத்துவரிடம் எதுவும் சொல்லாமல் வெட்கப்பட்டுக் கொண்டு அனைத்தையும் மறைத்துவிட்டார்.
பின்னர் மருத்துவர்கள் கேட்ட பின்பு அந்தப் பெண் ஆணுறையை தெரியாமல் விழுங்கி விட்டதாக ஒப்புக் கொண்டார் மருத்துவர்கள் எஞ்சியிருந்த சிறிய ஆணுறையின் துண்டுகளை அகற்ற மூச்சுக் குழாய் மூலம் பரிசோதனை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினர்.