Home உள்ளூர் செய்திகள் தேர்தல் பணியில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் சஸ்பெண்ட்!

தேர்தல் பணியில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் சஸ்பெண்ட்!

Collector

கோவை வால்பாறை தொகுதியில் தேர்தல் பணியில் அலட்சியம் காட்டிய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் வால்பாறை தொகுதியில் தேர்தல் செலவினம் குறித்து அறிக்கையை சரிபார்க்காமல் இருந்த புகாரில் வட்டார வளர்ச்சி அதிகாரி, 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி, காவலர்கள் பிரசாத், குமரவேல் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் செலவின பார்வையாளர் ராம்கிருஷ்ணகேடியா சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையை சார்பார்க்காமல் அலட்சியம் காட்டியுள்ளனர்.

அறிக்கை அளித்த 2 மணிநேரமாகியும் பணிசெய்யாமல் அலட்சியமாக இருந்ததால் பறக்கும்படை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராம்கிருஷ்ணகேடியா புகாரின் பேரில் கோவை மாவட்டம் தேர்தல் அதிகாரியான ஆட்சியர் நாகராஜன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version