தன்னுடைய காதலியோடு ஜாலியாக ஹோலி கொண்டாடிய காதலனை காதலியின் உறவினர்கள் வெட்டி கூறு போட்ட சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் சம்பாலில் உள்ள மொராதாபாத்தில் உள்ள பிலாரியில் வசிக்கும் 21 வயது இளைஞன் தில்லியில் தையல்காரராக பணி புரிகிறார். அவர் சமீபத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட தன்னுடைய சொந்த ஊரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.
மேலும் அந்த ஊரில் உள்ள ஒரு பெண்ணை அவர் காதலித்து வந்துள்ளார். அதனால் உறவினர் வீட்டிற்கு வரும் சாக்கில் அவர் அந்த காதலியை பார்த்து அவரோடு ஹோலி பண்டிகையை ஜாலியாக கொண்டாட வந்தார்.
ஹோலியன்று காதல் ஜோடி காதலியின் உடலில் ஹோலி பவுடர்களை கொட்டி, ஒருவருக்கொருவர் வண்ணம் அடித்து விளையாடியுள்ளார்.
இந்த காட்சியை அந்த பெண்ணின் உறவினர்கள் கண்டு விட்டனர். மனம் கொதித்து, கோபம் தலைக்கேறி அவர்கள் அனைவரும் அருவாளை எடுத்து கொண்டு அந்த இடத்திற்கு விரைந்து வந்தார்கள்.
பின்னர் அவர்கள் அந்த இளைஞரை அதே இடத்திலே வெட்டி துண்டாக்கினர். பின்னர் துண்டிக்கப்பட்ட அவரின் உடலை ஒரு சாக்கு பையில் அடைத்து அங்குள்ள குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்றனர். பிறகு பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து அந்த காதலனை வெட்டி கொன்ற சிறுமியின் தந்தை உட்பட இரண்டு நபர்களை கைது செய்தனர். பின்னர் இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.