இந்தியாவில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து தொடரில் இந்திய அணி 3 வடிவங்களிலும் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றி இருக்கிறது. இதையடுத்து இந்தியாவில் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்தியா-இங்கிலாந்து தொடரில் பங்குபெற்ற ஐபிஎல் வீரர்கள் அனைவரும் தற்போது தங்களது ஐபிஎல் அணிகள் உடன் இணைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த ஐபிஎல் சீசன் நடைபெற இன்னும் 8 நாட்களே இருப்பதால் அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் எந்த ஒரு அணியும் தங்களது சொந்த மைதானங்களில் விளையாட முடியாது என்று அதிரடி முடிவை பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
இதனால் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானம் சொந்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியை சென்னையில் விளையாட உள்ளது. இதனால் மும்பை வீரர்கள் அனைவரும் தற்போது சென்னை வந்தடைந்துள்ளனர். முதல் போட்டி தொடங்க இன்னும் 6 நாட்களே உள்ளதால் மும்பை வீரர்கள் அனைவரும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அனைவரும் சென்னை வந்ததும் சென்னைக்கு வணக்கம் சொல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் ஹிட்மேன் ரோகித் சர்மா தமிழில் பேசியிருக்கிறார். ‘வணக்கம் சென்னை மும்பை இந்தியன்ஸ் இங்கே வந்துட்டோம்’ என்று ரோகித் சர்மா பேசியிருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். மேலும், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Chenn-hi 👋#OneFamily has arrived 💙#MumbaiIndians #IPL2021 @ImRo45 pic.twitter.com/6Yu0EvXP2k
— Mumbai Indians (@mipaltan) March 31, 2021