கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக செல்லும்போது, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை ஹெலிகாப்டரில் இருந்தபடி வீடியோ எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மெய் சிலிர்க்க விவரித்துள்ளார் பிரதமர் மோடி. அவரது டிவீட் வைரலானது.
பாரத நாட்டின் தென் கோடி முனையில் கம்பீரமாக நிற்கும் இரண்டு நினைவுச் சின்னங்கள் விவேகானந்தர் பாறையில் அமைக்கப் பட்ட நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவருக்கு அமைக்கப் பட்ட சிலை. எந்த சுனாமிக்கும் அசைந்து கொடுக்காத கம்பீரத்துடன் இவை இரண்டும் திகழ்கின்றன.
கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்துக்காக செல்லும்போது, ஹெலிகாப்டரில் இருந்தபடியே வீடியோ எடுத்து தன் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டார் பிரதமர் மோடி. கம்பீரமான விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை என புகழாரம் சூட்டி உள்ளார். மோடி எடுத்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
On the way to the rally in Kanyakumari, caught a glimpse of the majestic Vivekananda Rock Memorial and the grand Thiruvalluvar Statue. pic.twitter.com/Mveo5k1pTa
— Narendra Modi (@narendramodi) April 2, 2021