பெரியார் நகரை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் அப்பகுதியில் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். அண்மையில் வாசுதேவனுக்கும் இதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், மாணவியிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் மாணவி வீட்டில் தனியே இருப்பதை பயன்படுத்தி, திருமண ஆசை காட்டி வாசுதேவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அதன்பின் மாணவி கர்ப்பமான விவகாரம் வீட்டிற்கு தெரியவர, கொந்தளித்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் தலைமறைவாக இருந்த வாசுதேவனை தேடிய போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.