தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவி, தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. நேற்று வரை லேசாக ஓர் ஓரத்தில் தண்ணீர் கசிந்து கொண்டிருந்தது நீர்வரத்து இன்று பாறைகளே வெளித் தெரிந்தன
தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான திருக்குற்றாலம் அருவியில் ஜூன் மாதம் தொடங்கி மார்ச் வரை தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும் கடந்த வாரம் மழை பெய்து வந்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து இருந்தது இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை இன்றி வெயில் அடித்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று போனது
திருக்குற்றால பகுதியில் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் சீசன் தொடங்கும். அதுவரை அருவிகளில் நீர்வரத்து இன்றி பாறைகளே வெளித்தெரியும்!