― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?அச்சுறுத்தும் கொரோனா: கடற்கரைப் பகுதிகளில் விடுமுறை தினங்களில் செல்வதற்கு தடை!

அச்சுறுத்தும் கொரோனா: கடற்கரைப் பகுதிகளில் விடுமுறை தினங்களில் செல்வதற்கு தடை!

- Advertisement -

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் செல்வதற்கு தடை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப் பட்டுள்ளன. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த ஓரிரு நாளில், தற்போது புதிய தளர்வுகளையும், கட்டுப்பாடுகளையும் மீண்டும் அறிவித்துள்ளது தமிழக அரசு.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களில் 11-4-2021 முதல் செல்ல தடை விதிக்கப்படுகிறது எனவும் வழிபாட்டுத் தலங்கள் அதிகப்பட்சம் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது எனவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இன்று முதல் (10.4.2021) பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, கீழ்க்காணும் புதிய கட்டுப்பாடுகளும்/ தளர்வுகளும், நாளை முதல் (11.4.2021) நடைமுறைப் படுத்தப்படும்.

அ) புதிய கட்டுப்பாடுகள்

i) சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவது 11.4.2021 முதல் தடைசெய்யப்படுகிறது.

ஆ) புதிய தளர்வுகள்

i) அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய, இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு, தற்போது, சம்பந்தப்பட்ட வழிபாட்டுத்தலங்களுடைய வழக்கமான நேரம் வரையிலேயோ அல்லது அதிகபட்சம் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டிற்காக, அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது.

இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

ii) இந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள், முதல் 7 நாட்களுக்கு மட்டும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி, அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றியும், அனைத்து காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிக்கப்படுகிறது.

-என்று, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version