Home அடடே... அப்படியா? மாஸ்க் மாட்டாம வந்து மாட்டிய வகையில்… தென்காசியில் ரூ.30 லட்சம் அபராதம் வசூல்!

மாஸ்க் மாட்டாம வந்து மாட்டிய வகையில்… தென்காசியில் ரூ.30 லட்சம் அபராதம் வசூல்!

பெட்ரொல் பம்ப் மாஸ்க்

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 700 ஐ தாண்டியுள்ளது. மருத்துவமனையில் 719 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் .

இன்று 10-ந்தேதி மட்டும் மாவட்டத்தில் 107 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. அம்பாசமுத்திரத்தில் 5 பேருக்கும் , நெல்லை மாநகரில் 54 பேருக்கும் , மானூரில் 5 பேருக்கும் , நாங்குநேரி பகுதியில் 6 பேருக்கும் , பாளையங் கோட்டையில் 7 பேருக்கும் , பாப்பாக்குடியில் 6 பேருக்கும் , ராதாபுரத்தில் 5 பேருக்கும் , வள்ளியூரில் 12 பேருக்கும் சேரன்மகாதேவி பகுதியில் 8 பேருக்கும் , களக்காடு பகுதியில் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடையநல்லூரில் 32 பேருக்கும் , செங்கோட்டையில் 5 பேருக்கும் வாசுதேவநல்லூரில் ஒருவருக்கும் , சங்கரன்கோவிலில் 13 பேருக்கும் , குருவிகுளம் , கீழப்பாவூர் பகுதியில் தலா 2 பேருக்கும் கடையம் பகுதியில் 4 பேருக்கும் , மேலநீலிதநல்லூர் பகுதியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் அரசின் விதிமுறைகளை மீறி சாலைகளில் முககவசங்கள் அணியாமல் வாகனங்களை ஓட்டி சென்றவர்களிடமிருந்து கடந்த ஆண்டு 2020 மார்ச் முதல் 09.04.2021 வரை மொத்தம் 30 லட்சத்து 3 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version