spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபுறாவிற்கு தண்ணீர் கொடுத்த சிறுவன்! வைரல் வீடியோ!

புறாவிற்கு தண்ணீர் கொடுத்த சிறுவன்! வைரல் வீடியோ!

- Advertisement -
dove

கோடைகாலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படும். பல விலங்கு நல அமைப்புகள் தங்கள் வீட்டிற்கு வெளியே அல்லது பால்கனியில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் பறவைகள் தண்ணீர் தாகம் தீர்க்கப்படும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு சிறுவன் தனது பால்கனியின் அருகே உட்கார்ந்திருக்கும் ஒரு புறாவுக்கு இரக்கத்துடன் தண்ணீர் வழங்கும் காட்சிகள் உள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள நிலையில், அதில் சிறுவன் ஒருவன் கரண்டியில் தண்ணீரை ஏந்தி புறா ஒன்றிற்கு தாகம் தீர்க்க முற்படுகிறான்.

பால்கனியில் அமர்ந்திருக்கும் சிறுவன் ஒரு கிரில் கேட்டினுள் உள்ளார். ஆனாலும் கேட்டிற்கு வெளியில் தாகத்துடன் அமர்ந்திருக்கும் பறவையை பார்த்து அதற்கு எப்படியாவது தண்ணீர் கொடுத்து விட வேண்டும் என முயற்சி செய்கிறார்.

அதற்காக அவர் ஒரு நீளமான குழி கரண்டியை எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி அந்த தண்ணீர் கீழே சிந்திவிடாமல் மிக பொறுமையாக பறவை அருகே கொண்டு செல்கிறார். ஆரம்பத்தில் அந்த புறா சிறுவனை நம்பவில்லை என்று தெரிகிறது,

ஆனால் அவன் கையை மேலும் நீட்டும்போது, ​​புறா கரண்டியிலிருந்து தண்ணீர் குடிப்பதைக் காணலாம். சிறுவனின் பெயர், மற்றும் விவரங்களை வனத்துறை அதிகாரி வெளியிடவில்லை. அன்பும், இரக்கமும் கலந்த அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அரை நிமிட காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ இதுவரை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைக் கொண்டுள்ளது. 5500க்கும் மேற்பட்ட யூசர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். சிறுவனின் கருணையை நெட்டிசன்கள் பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்

சில யூசர்கள் பறவைகள் மற்றும் விலங்குகளை கோடையில் கவனித்துக்கொள்ள பல்வேறு வழிகளை குறிப்பிட்டு வருகின்றனர்.இந்த வீடியோவிற்கு பதிலளித்த ஒரு யூசர், சிறுவனின் படைப்பாற்றலை பாராட்டியுள்ளார். இந்த வீடியோவை முதலில் ஏப்ரல் 6ம் தேதி பிரியம்வாடா என்ற நபர் பகிர்ந்துள்ளார். அவரது இடுகையும் சமூக வலைத்தளத்தில் வரவேற்பை பெற்றது. ஒரு குழந்தையிடமிருந்து நாம் எவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டும்,

எல்லா உயிரினங்களிடமும் கருணை காட்ட வேண்டும் என்பது பற்றி அவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக கழிவுநீரில் மூழ்கிய ஒரு நாயை இளைஞர் காப்பாற்றிய வீடியோ வைரலானது. இந்த வீடியோவும் ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றது. மேலும் அன்பு அனைத்து இடங்களிலும் உள்ளது என பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe