January 18, 2025, 5:28 AM
24.9 C
Chennai

விமானப் பயணத்தில் மூச்சுத் திணறல் மயக்கம்: உதவிய கனிமொழிக்கு சக பெண் பயணி நன்றி

KANIMOZHI_MPசென்னை: விமானப் பயணத்தின் போது மயக்கம் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட பெண் பயணி ஒருவருக்கு முதலுதவி ஏற்பாடு செய்த கனிமொழிக்கு அந்தப் பெண் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். தி.மு.க. மகளிரணிச் செயலரும் எம்.பி.யுமான கனிமொழி நேற்று கோவை சென்று விட்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது, விமானத்தில் உடன் பயணம் செய்த சக பெண் பயணி ஒருவர் தனக்கு மயக்கமும், மூச்சு திணறலும் ஏற்படுவதாகத் தெரிவித்தார். அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி தைரியமூட்டிய கனிமொழி, விமானம் சென்னை வந்ததும் முதலுதவிக்கு ஏற்பாடு செய்தார். மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்தனர். அந்தப் பயணி தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதை அடுத்து அந்தப் பெண்ணை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்த கனிமொழி, தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் செல்போனில் தொடர்பு கொண்டு அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்கும்படி கூறினாராம். மேலும் சிகிச்சைக்கான செலவை வழங்குவதாகக் கூறியதையடுத்து அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று உடல்நலம் தேறிய அந்தப் பெண், மருத்துவமனையில் இருந்து வந்ததும், கனிமொழியிடம் தன் நன்றியைத் தெரிவித்தார். அந்தப் பெண் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் ‘ஸ்வர்ணம் கவுர்’ என்பதும், அங்கே அவர் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருவதும் தெரியவந்தது. பின்னர் அவர் தில்லி புறப்பட்டுச் சென்றார்.

ALSO READ:  ஒரு நாள் வெடிக்கிறதால ஒண்ணும் ஆகிடாது; பட்டாசு வெடிங்க, தீபாவளிய சந்தோசமா கொண்டாடுங்க!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை