தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருப்பதாக அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி…
முழு ஊரடங்கில் அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி; மளிகை, காய்கறி இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி!
நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு ஊரடங்கு காலத்தில் தடை; நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்!
முழு ஊரடங்கில் அனைத்து தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், ஐ.டி.நிறுவனங்கள்,பூங்காங்கள், அருங்காட்சியகங்கள் செயல்படத் தடை.
தமிழகத்தில் வருகிற 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி!
தமிழகத்தில் வருகிற 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாது என அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியத் துறைகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலங்களும் மூடப்படும்!
தமிழகத்தில் வருகிற 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி!
தமிழகத்தில் வருகிற 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உள் அரங்குகள், திறந்த வெளியில் அரசியல், சமுதாய நிகழ்வுகளுக்கு தடை!
தமிழகத்தில் வருகிற 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பகல் 12 மணி வரை மட்டுமே தேநீர் கடைகளுக்கு அனுமதி!
அரசு வெளியிட்ட அறிவிப்பு முழுவிவரம்…