Home உள்ளூர் செய்திகள் நிற்காமல் சென்ற பேருந்து! நடுரோட்டில் தர்ணாவில் ஈடுப்பட்ட குடும்பம்!

நிற்காமல் சென்ற பேருந்து! நடுரோட்டில் தர்ணாவில் ஈடுப்பட்ட குடும்பம்!

trichi
trichi

திருச்சி பகுதியை சேர்ந்த ராஜா என்ற 40 வயது இளைஞர் ஈரோட்டில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

தனது, தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருச்சியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

எனவே பதறிப்போன ராஜா தனது குழந்தைகள், மனைவியுடன் தாயை பார்க்க வெள்ளகோவில் வழியே திருச்சிக்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.

நேற்று காலை, வெள்ளகோவில் வழியே அவர் திருச்சி பஸ்சுக்காக காத்திருந்த பொழுது பல மணி நேரங்கள் ஆகியும் அவர்களுக்கு பேருந்து கிடைக்கவில்லை.

அவ்வழியே வந்த அனைத்து பேருந்துகளும் நிறுத்தாமல் சென்றதால், மிகவும் மன உளைச்சலுக்கு அந்த குடும்பத்தினர் ஆளாகியுள்ளனர்.

பின்னர், என்ன செய்வதென்று தெரியாமல் திடீரென்று மனைவி குழந்தைகளுடன் சாலையின் நடுவே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் விஷயம் கேள்விப்பட்டு அவர்களை சமாதானப்படுத்தி, அவ்வழியே வந்த திருச்சி பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். இதனால், சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version