கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால், நாளுக்கு நாள் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பணமாக நிதி உதவி செய்வதுடன் ஒரு சிலர் மருத்துவ உதவிகளையும் நேரடியாகவே செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் மோகன்லால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உதவி திட்டத்தை தற்போது துவங்கியுள்ளார்.
மோகன்லால் தனது பெற்றோர் பெயரில் விஸ்வசாந்தி என்கிற அறக்கட்டளையை துவங்கி அதன்மூலம் கேரளாவில் பலவிதமான உதவிகளை செய்து வருகிறார்.
இதன்மூலம் கேரளாவில் பல்வேறு இடங்களில் உள்ள 13 மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரண வசதிகள் கூடுதலாக செய்து தரப்பட்டுள்ளன.
மோகன்லால் கூறும்போது, “கேரளா மட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.