ஊடக நண்பரை சந்திக்க போன வாலிபரை பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக (IIUI) ஹாஸ்டலில் 22 வயதான ஒரு கல்லூரி மாணவர் தங்கியிருந்தார்.
இவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் பல நண்பர்கள் பழக்கமானார்கள். அதனால் அந்த ஊடகத்தின் மூலம் பழக்கமான இரு நண்பர்கள் அவரை ஹாஸ்ட்டலில் சந்திக்க விரும்பினார்கள். ஆனால் இவர் அவர்கள் தங்கியிருக்கும் ஹாஸ்ட்டலுக்கு சந்திக்க சென்றார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த 22 வயதான மாணவர் அவர்களை சந்திக்க தனியே அவர்களின் ஹாஸ்ட்டலுக்குள் சென்றார். அப்போது அங்கிருந்த அந்த இருவரும் அந்த மாணவரை அந்த அறையில் கட்டி போட்டனர்,
பின்னர் அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவர் அந்த அரையிலிருந்து தப்பி வந்தார்.
பின்னர் நடக்க முடியாமல் சாலையில் விழுந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை காப்பாற்றி அருகிலுள்ள ஹாப்பிடலில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தி போலீசுக்கு தகவல் சொன்னார்கள். போலீசார் வழக்கு பதிந்து அந்த மாணவரை பாலியல் கொடுமை செய்த இரு இளைஞர்களை கைது செய்தனர்