வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில் நாளை முதல் ஏசி வசதி இல்லாமல் ஜவுளி மற்றும் நகைக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
வகை 2-ல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 23 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து வரும் ஜூலை 5-ம் தேதி வரையில் வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்து நாளை 28 முதல் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் வணிகர்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து வகை 2 ல் உள்ள மாவட்டங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதியின்றி நாளை 28 ம் தேதி முதல் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையில் ஜவுளி, மற்றும் நகை கடைகள் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.