உத்தரபிரதேசத்தில் கணவரை விட்டு பிரிந்த மனைவி, கணவரின் தந்தையை திருமணம் செய்து கொண்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பவுடன் எனும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வசித்து வந்த நிலையில், தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புகாரளித்துள்ளார்.
இந்நிலையில், புகாரளித்த இளைஞன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து அவருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் திருமணம் செய்து கொண்ட 6 மாதத்திலேயே பிரிந்துள்ளனர்.
இதற்கிடையில், காணாமல் போன தந்தையை குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞரின் தந்தை விவாகரத்து பெற்ற தனது மகனின் மனைவியை திருமணம் செய்து கொண்டு வாழ்வது தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன் இது தொடர்பாகவும் புகார் அளித்துள்ளார். எனவே இரு தரப்பினரையும் வரவழைத்து காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில்,
உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் நகரைச் சேர்ந்த 22 வயது இளைஞனின் தந்தை துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இளைஞனின் 48 வயதான தந்தைக்கு பண உதவி செய்யாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இளைஞரும் அந்த பெண்ணும் அப்போது மைனர் என்பதால் முறைப்படி திருமணம் பதிவு செய்யவில்லை. தற்பொழுது இருவரும் இணைந்து வாழலாம் என இளைஞர் அந்தப்பெண்ணை அனுகியுள்ளார். குடிக்கு அடிமையான உன்னுடன் வாழமுடியாது என மறுத்துவிட்டார் அந்த பெண். விவாகரத்து கேட்டுள்ளார்.
இந்நிலையில் அந்தப்பெண் 18 வயது பூர்த்தியானதும் தனது விருப்பப்படி இளைஞனின் தந்தையை மணந்துக்கொண்டுள்ளார். அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
மேலும் தனது இரண்டாவது கணவருடன் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். எனவே, இது தொடர்பாக மேலும் இளைஞருடன் திருமணம் செய்ததற்கான சட்டப்பூர்வமான ஆவணங்கள் இல்லை என்பதால் நாங்கள் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இதனால் இந்த விவகாரத்தில் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.