மருமகளிடம் பாலியல் தொல்லை மற்றும் வரதட்சணை தொல்லை கொடுத்த கணவர் மற்றும் மாமனாரை போலீஸ் விசாரித்து வருகிறது
கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களா பகுதியை சேர்ந்தவர் 31 வயதான ஹரீஷ்க்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது.
சந்தோஷமாக போய் கொண்டிருந்த அவர்களின் வாழ்வில் மாமனாரால் புயல் வீசியது. அவரின் தூண்டுதலால் சமீபகாலமாக இளம்மனைவியிடம் வரதட்சணை கேட்டு ஹரீஷ் கொடுமைப்படுத்தி வந்தார்
பெற்றோரிடமிருந்து ரூ.10 லட்சம் வாங்கி வரும்படி ஹரீஷும் , அவரது தந்தை 61 வயதான ராமகிருஷ்ணா ஆகிய 2 பேரும் இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்தனர்.
ஆனால் வரதட்சணை வாங்கி வருவதற்கு இளம்பெண் மறுத்ததன் காரணமாக தனது மனைவியை ஹரீஷ் அடித்து, உதைத்து தாக்கினார் .
மேலும் ஹரிஸ் இல்லாத நேரத்தில் அவரின் தந்தை ராமகிருஷனா அவரின் மருமகளிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .
மேலும் இப்படி அவர் தொல்லை கொடுத்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். அதனால் அந்த பெண் பயந்து வாழ்ந்து வந்தார். ஆனால் நாளுக்கு நாள் கொடுமை பொறுக்க முடியாமல் அந்த பெண் போலீசில் புகார் அளித்தார் .
அதனால் போலீசார் அந்த கணவர் ஹரிஷுக்கும் மாமனார் ராமகிருஷ்ணாவுக்கும் விசாரணைக்கு வர உத்தரவிட்டுள்ளார்கள்