Home உள்ளூர் செய்திகள் ரெட் அலர்ட்.. இங்கெல்லாம் கனமழை! வானிலை ஆய்வு மையம்!

ரெட் அலர்ட்.. இங்கெல்லாம் கனமழை! வானிலை ஆய்வு மையம்!

Regional Meteorological Center 1
Regional Meteorological Center 1

தமிழகத்தில் வருகின்ற 29 மற்றும் 30 ஆம் தேதி அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற 29 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் ஒரு சில பகுதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வரும் 29 ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 30 ஆம் தேதி நீலகிரி, கோவை மற்றும் திருப்பூரில் அதீத கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version